close
Choose your channels

இன்றைய இசையுலகம் திருப்பதி மொட்டை மாதிரி உள்ளது. இளையராஜா

Monday, June 12, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசைஞானி இளையராஜா சமீபத்தில் சென்னை வடபழனியில் உள்ள அவரது ரிக்கார்டிங் ஸ்டுடியோவில் னது இசைக்குழுவில் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் பாடகர்கள்-பாடகிகளை சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தார். இந்த சந்திப்பில் அவரிடம் பணிபுரிந்த பல இசைக்கலைஞர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தற்போதைய இசை குறித்தும், இசையமைப்பாளர் குறித்தும் இசைஞானி வேதனையுடன் ஒருசில கருத்துக்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது:
நான் திரைப்படங்களுக்கு இசையமைத்து 40 வருட காலங்கள் முடிந்து விட்டது. இனிமேல் முழு இசைக்கலைஞர்களும் உட்கார்ந்து பாடகர், பாடகிகளுடன் பாடி இசையமைத்து, ஓலிப்பதிவு செய்வது என்பது இந்த உலகில் இந்த பேரண்டத்தில் நடக்கப்போவது இல்லை. அந்த காலகட்டம் முடிந்து போய் விட்டது.
இதற்கு அர்த்தம் என்னவென்றால், மியூசிக் போடுகிறவர்கள் தற்போது இல்லை. மியூசிக் வாசிக்கிறவர்கள் இல்லை. மியூசிக் பாடுகிறவர்களும் இல்லை. சினிமாவில் கையை காலை ஆட்டுகிற மாதிரி, இசை என்ற பெயரில் சும்மா ஏதோ நடக்கிறது. இங்கு பாடுகிறவர்களும் இனிமேல் பாடப்போவது இல்லை. காரணம் பாடல்களுக்கான டியூன் இல்லை.
எவ்வளவோ மிகப்பெரிய உயர்ந்த விஷயமாக இந்த இசை இருந்தது. எத்தனை ராகங்கள், எவ்வளவு கலப்புகள், எவ்வளவு வாத்திய கருவிகள், வாசிக்கும் விதங்கள்தான் எத்தனை, எத்தனை உணர்வுகள் எல்லாம் போய்விட்டன. திருப்பதிக்கு போய் மொட்டை அடிச்சிட்டு வந்த மாதிரி அத்தனையும் சுத்தமாக போய்விட்டன. புருவத்தையும் சேர்த்து எடுத்து விட்டான். புருவத்தை எடுத்த மாதிரி, மொட்டை அடித்த மாதிரி, இப்போது இசை உலகமும், திரையுலகமும் ஆகிவிட்டது. இந்தியா முழுவதும் இசை உலகம் சிதைந்து விட்டது.
இவ்வாறு இளையராஜா பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.