close
Choose your channels

ரஜினி என்னிடம் கடன்பட்டுள்ளார். இசைஞானி இளையராஜா

Monday, June 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் சமீபத்தில் சென்னை காமராஜர் அரங்கில் ஒரு நாள் முழுவதும் கொண்டாடப்பட்டது என்பதும் இந்த விழாவில் உலக நாயகன் கமல் உள்பட பலர் நேரில் வருகை தந்து இசைஞானிக்கு வாழ்த்து தெரிவித்தார்கள் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இளையராஜா இறுதியில் அனைவருக்கும் நன்றி கூறியபோது ரஜினி தனக்கு கடன் பட்டிருப்பதாக கூறினார்.
ரஜினிகாந்த் அவர்கள் அன்றைய தினம் காலையிலேயே தனக்கு மும்பையில் இருந்து போன் செய்து தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியதாகவும், 74 வயது என்பது மிகப்பெரிய விஷயம் அதனால் தான் போன் செய்து வாழ்த்து கூறுவதாகவும் தெரிவித்தார். அப்போது அவர் எனக்கு ஒரு டீ வாங்கி கொடுக்க வேண்டிய பாக்கி இருப்பதையும் அதை எப்போது வாங்கி தருவீர்கள் என்று கேட்டதும் ஒரு பத்து நிமிடம் விழுந்து விழுந்து போனிலேயே சிரித்ததாகவும், கண்டிப்பாக சென்னை திரும்பியவுடன் டீ வாங்கித்தருவதாக கூறியதாகவும் நகைச்சுவையுடன் இசைஞானி தெரிவித்தார்.
அதேபோல் தனக்கு ஒரு பிறந்த நாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை தெரிந்து கொண்டு கமல்ஹாசன் அவர்கள் தானாகவே முன்வந்து 'நானும் இந்த விழாவுக்கு வருவேன், ராஜாவுக்கு வாழ்த்து கூறுவேன் என்று வம்படியாக வந்து தனக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு போனதாக கூறியுள்ளார். இவ்வாறாக ரஜினி, கமல், நான் மூவரும் பல வருடங்களாக இணைபிரியாத நண்பர்களாக உள்ளதாக இளையராஜா இந்த விழாவில் குறிப்பிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.