close
Choose your channels

தளபதி ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தெறிக்க விடப்படும் 'தெறி'

Wednesday, April 12, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாகிய 'தெறி' திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதியோடு ஒரு வருடம் நிறைவு பெறுவதை அடுத்து சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் 'தெறி' திரைப்படத்தின் சிறப்பு காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த சிறப்புக்காட்சிக்கான டிக்கெட்டுக்கள் ஒருசில மணிக்கு விற்று தீர்ந்த நிலையில் தற்போது தளபதி ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மேலும் இரண்டு சிறப்பு காட்சிகள் திரையிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதே நாளில் சென்னை போரூரில் உள்ள ஒரு திரையரங்கம் உள்பட வேறு சில திரையரங்குகளிலும், தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் 'தெறி' சிறப்பு காட்சிகள் திரையிட திட்டமிடப்பட்டுள்ளன. எனவே தளபதி ரசிகர்கள் 'தெறி'யின் முதல் ஆண்டு தினத்தை தெறிக்க விடப்போகிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது.

விஜய், அட்லி இணைந்த முதல் படமான 'தெறி' முதல் ஆண்டை சிறப்பாக கொண்டாடப்படவுள்ள நிலையில் இதே கூட்டணி மீண்டும் இணைந்துள்ள 'தளபதி 61' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா மற்றும் நித்யாமேனன் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.