close
Choose your channels

ஐநாவின் ECOSOC தேர்தல்: அசத்திய இந்தியா ஆறுதல் பரிசு கூட கிடைக்காத பாகிஸ்தான்

Friday, June 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஐநாவின் பொருளாதார, சமூக அமைப்புன் உறுப்பினர்களுக்கான (ECOSOC ) தேர்தல் இன்று நடைபெற்றது. காலியாக உள்ள 18 இடங்களை நிரப்பும் வகையில் நடத்தப்பட்ட இந்த தேர்தலில் இந்தியா 183 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று மீண்டும் இந்த அமைப்பில் தனது இடத்தை உறுதி செய்தது. ஆசிய பிராந்தியத்தில் ஜப்பானை அடுத்து அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் இதே தேர்தலில் போட்டியிட்ட பாகிஸ்தானுக்கு வெறும் ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்ததால் இந்த அமைப்பில் பாகிஸ்தானுக்கு இனி இடமில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு கிடைத்த இந்த வெற்றி குறித்து கருத்து கூறிய ஐநா தூதரகத்தின் இந்தியாவின் நிரந்த பிரதிநிதி சயீத் அக்பரூதின் ''இந்தியாவுக்கு இன்னொரு வெற்றி, வாக்களித்து ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி'' என்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.