close
Choose your channels

இலங்கை சிறையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்

Friday, August 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து தற்போது விளையாடி வருவது தெரிந்ததே. இதுவரை விளையாடிய இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, நாளை 3வது போட்டியில் விளையாடவுள்ளது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இலங்கையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தளங்களை ஓய்வு நேரத்தில் சுற்றி பார்த்து வருகின்றனர். அவற்றில் ஒன்று சீதையை ராவணன் சிறை வைத்த அசோகவனம். தற்போது நுவரேலியா என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் சீதைக்கு கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் சென்று பார்த்தனர்.

இந்த கோவிலை சுற்றியுள்ள பாறைகளில் காணப்படும் கால்தடங்கள் ராவணன் வளர்த்த கால்தடம் என்று கூறப்படுகிறது. சீதையை சிறை வைத்த இடத்தை பார்த்தது வித்தியாசமான அனுபவமாக இருந்ததாக வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.