close
Choose your channels

கூவத்தூர் செல்கிறார் முதல்வர் ஓபிஎஸ்

Tuesday, February 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சசிகலாவுக்கு தண்டனையை உறுதி செய்யும் வகையில் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளிவந்துள்ளதை அடுத்து அதிமுக சட்டமன்ற தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே அவர் ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னருக்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் முதல்வர் ஓபிஎஸ் கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏக்களின் மன நிலையை தெரிந்து கொள்வதற்காக நேரடியாக கூவத்தூர் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏக்களை நேரில் முதல்வர் ஓபிஎஸ் சந்தித்தால் திருப்பம் நிகழுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில் ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களிடம் வெற்றுத்தாள்களில் கையெழுத்து வாங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் எம்.எல்.ஏக்களின் உண்மை நிலை என்ன என்பது முதல்வர் அவர்களை நேரில் சந்தித்தால் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.