close
Choose your channels

வரும் டிசம்பரில் ஜெய்-அஞ்சலி திருமணம்?

Monday, June 26, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, பிரசன்னா-சினேகா நட்சத்திர ஜோடிகளை அடுத்து ஜெய்-அஞ்சலி ஜோடி காதலித்து வருவதாகவும், விரைவில் இவர்களது திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் அஞ்சலியின் பிறந்த நாளில் ஜெய் தனது சமூக வலைத்தளத்தில் ''நானும், கடவுளும் எப்பொழுதும் உன்னுடன் இருப்போம்' என்று கூறியது ஜெய்-அஞ்சலி காதலின் வதந்தியை உறுதி செய்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் வரும் டிசம்பரில் ஜெய்-அஞ்சலி திருமணம் திருப்பதியில் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த செய்தியை அஞ்சலி தரப்பினர் உறுதி செய்யவில்லை. தற்போது நடித்து வரும் திரைப்படங்களில் முழுகவனம் செலுத்தி வருவதாகவும், திருமணம் நடைபெறும்போது கண்டிப்பாக அனைவருக்கும் அறிவிக்கப்படும் என்று அஞ்சலி தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.