close
Choose your channels

பிக்பாஸ் வீட்டில் திடீர் திருப்பம்: ஜூலி வெளியேற்றப்படுகிறாரா?

Thursday, July 27, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுபவர்களாக ஓவியா, ஆரவ், ரைசா ஆகியோர் தேர்வு பெற்றிருந்தபோதிலும், இந்த வாரம் யாரும் எலிமினேட் கிடையாது என்று பிக்பாஸ் நேயர்களுக்கு மட்டும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள புரமோ வீடியோவில், 'பிக்பாஸ் வீட்டில் யார் இருக்கக்கூடாது என்று நினைக்கின்றீர்களோ அவரை ஒருமனதாக தேர்ந்தெடுங்கள் என்று பிக்பாஸ் கூறுகிறார். இதன் பின்னர் அனைவரும் ஒருவருடன் ஒருவர் இதுகுறித்து டிஸ்கஸ் செய்கின்றனர். காயத்ரி இதுகுறித்து ஆரவ்விடம் கூறியபோது, 'ஓவியா தற்போது நல்லபடியாக மாறி வருகிறார், ஆனால் சக்தியும் ஜூலியும் எதிர்ப்பதமாக மாறி வருகிறார்கள் என்று கூறுகிறார். அதேபோல் ரைசாவும் ஜூலியும் ஒருபக்கமும், இன்னொரு பக்கம் சினேகனும், கணேஷூம் ஆலோசிக்கின்றனர்.
கடைசியில் முடிவை காயத்ரி அறிவிக்கின்றார். காயத்ரி இதுகுறித்து கூறியபோது, 'இதுவரைக்கும் நடந்த விஷயங்களிலும், இப்போது நடந்து கொண்டிருக்கும் விஷயங்களிலும் சரி, ஓரளவுக்கு அனைவரும் ஒத்து போய்க்கொண்டிருக்கின்றனர். எனவே ஜூலிதான் வெளியேற்றப்பட வேண்டிய நபர்' என்று கூறுகிறார். இதனையடுத்து ஜூலி கன்பெஃக்ஷன் அறைக்கு செல்வதோடு இன்றைய புரமோ வீடியோ முடிந்துள்ளது.
இந்த வாரம் யாரும் எலிமினேட் செய்யப்பட மாட்டார்கள் என்று அனைவரும் நினைத்த நிலையில் திடீர் திருப்பமாக ஜூலி இன்று வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.