close
Choose your channels

பக்கத்து வீட்டு பெண்ணுடன் நடந்தது என்ன? நடிகை மதுமிதா விளக்கம்

Friday, September 1, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நகைச்சுவை நடிகை மதுமிதா, அவருடைய பக்கத்து வீட்டு பெண் ஒருவரை கடித்துவிட்டதாக நேற்று முதல் செய்திகள் வெளியான நிலையில் இதுகுறித்து நடிகை மதுமிதா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ மூலம் விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:
என்னுடைய டிரைவர் பாலாஜி என்பவரது மனைவி உஷா மூலம் வளசரவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை விலைக்கு வாங்கினேன். இதற்காக உஷாவுக்கு நான் கமிஷனாகவே ரூ.60 ஆயிரம் வரை கொடுத்துள்ளேன். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களில் உஷாவும் ஒருவர். இந்த வீட்டுக்கு வந்த பின்னர் சில நாட்கள் நல்லபடியாக போய்க்கொண்டிருந்தது. ஆனால் பராமரிப்பு பணியை பார்த்து கொண்டிருக்கும் உஷா, அதற்காக கட்டணம் அதிகம் வாங்குவதாக அனைவருக்கும் புரிய வந்துள்ளது. இதுகுறித்து ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து பராமரிப்பு பணியை வேறு ஒருவரிடம் ஒப்படைத்தோம்.
இதனால் ஆத்திரமான உஷா, பலவேறு விதங்களில் குடியிருப்பில் இருப்பவர்களுக்கு டார்ச்சர் கொடுத்தார். இதுகுறித்து காவல்துறையினர்களிடம் புகார் அளித்தோம். புகார் அளித்த அன்றே, 'நான் கன்னடக்காரி, என் மீது புகார் கொடுத்த உங்களை என்ன செய்கிறேன் பார்' என்று உஷா மிரட்டினார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் மீண்டும் பிரச்சனை வந்தபோது உஷா எனது செல்போனை பிடுங்கி வைத்து கொண்டதோடு, என்னை தலையில் கடுமையாக தாக்கினார். நான் என்னை தற்காத்துக் கொள்ளவே அவரது கையை கடித்தேன். ஒரு பெண் தற்காப்புக்காக நகத்தையும், பல்லையும் பயன்படுத்தலாம் என்று நம்முடைய சட்டத்திலேயே உள்ளது. தாக்குபவர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சட்டம் ஒன்றுதான்.
எனவே கடந்த இரண்டு நாட்களாக என்னை பற்றி தவறான செய்தி வெளியாவதற்கான விளக்கம் தான் இது. விரைவில் காவல்துறையினர் இந்த பிரச்சனைக்கு நல்ல முடிவு கட்டுவார்கள் என்று நம்பிக்கை உள்ளது. என்னுடைய கருத்தில் நம்பிக்கை இருந்தால் எனக்கு ஆதரவு தாருங்கள்' என்று மதுமிதா வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.