close
Choose your channels

பும்ரா வீசிய நோபால் இதுக்காவது பயன்படுதே!

Thursday, June 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சாம்பியன்ஷிப் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியை இப்பொழுது நினைத்தாலும் ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகனுக்கும் அளவில்லாத ஆத்திரம் வரும். குறிப்பாக பும்ரா வீசிய நோபாலில் தப்பிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஜமான், 111 ரன்கள் அடித்ததும் இந்தியாவின் தோல்விக்கு இதுவும் ஒரு மிகப்பெரிய காரணம் என்பதையும் இன்னும் சில வருடங்களுக்கு மறக்க முடியாது.
இந்த நிலையில் இந்த நோபாலை வைத்து ராஜஸ்தான் டிராபிக் போலீஸ் ஒரு விழிப்புணர்வு மீம் ஒன்றை கிரியேட் செய்து அதை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளது.
பும்ரா நோபால் வீசிய புகைப்படத்தையும், சாலையில் கறுப்பு வெள்ளைக் கோட்டைத் தாண்டாமல் நிற்கும் கார்களின் புகைப்படத்தையும் இணைத்து மீம் ஒன்றை உருவாக்கியுள்ளது. மேலும் அந்த மீமில் 'கோட்டை கடந்தால் கொடுக்கும் விலை என்னவென்று உங்களுக்குத் தெரியும். எனவே கோட்டை தாண்ட வேண்டாம்' என்று பதிவு செய்துள்ளது. பும்ராவின் நோபால் இதற்காவது உதவுகிறதே என்று ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டியதை தவிர வேறு வழியில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.