close
Choose your channels

ஜெயலலிதா நினைவிடம் திடீர் அலங்கரிப்பு: ஓபிஎஸ்-ஈபிஎஸ் வருகையா?

Friday, August 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் திடீரென மலர்களால் சற்று முன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் வருகை தரவுள்ளதாகவும் அதன் காரணமாகவே அலங்கரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணியும், இந்நாள் முதல்வர் ஈபிஎஸ் அணியும் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் இன்று மாலை அதிகாரபூர்வமாக இணையும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் திடீரென அலங்கரிக்கப்பட்டுள்ளதால் இணைப்பு குறித்த அறிவிப்புக்கு பின்னர் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகிய இருவரும் ஜெயலைதா நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சற்றுமுன் ஓபிஎஸ் அணியின் ஆதரவாளர்களும், ஈபிஎஸ் அணியின் ஆதரவாளர்களும் தனித்தனியே ஆலோசனை நடத்தி முடித்துள்ளதாகவும், எந்த நேரத்திலும் இணைப்பு குறித்த அறிவிப்பு வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும் அதிமுக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.