சசிகலாவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம். ஓபிஎஸ்-இன் அடுத்த அதிரடி
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து கொண்டு வரும் நிலையில் அதிமுகவை கைப்பற்றுவது, ஆட்சி அமைப்பது மட்டுமின்றி ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை சசிகலாவிடம் இருந்து மீட்டு நினைவு இல்லம் அமைக்க வேண்டும் என்பதும் அவரது கடமைகளில் ஒன்றாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் போயஸ் தோட்ட வேதா இல்லத்தை அம்மா நினைவு இல்லமாக மாற்றும் அரசின் அறிவிப்பு விரைவில் வரும் என்று முதல்வர் ஓபிஎஸ் கூறியிருந்த நிலையில் தற்போது ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற தனது இல்லத்தில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளார். இதில் தற்போது நூற்றுக்கணக்கானோர் கையெழுத்திட்டு வருகின்றனர்.
அதிமுக கட்சி, ஆட்சி அமைக்கும் வாய்ப்பு மட்டுமின்றி போயஸ் தோட்ட இல்லமும் சசிகலா கையை விட்டு அகலும் நிலை வெகுவிரைவில் ஏற்படும் என்று அதிமுக தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.