close
Choose your channels

பிரபல நட்சத்திர தம்பதி வீட்டில் ரூ.7 கோடி பழைய நோட்டுக்கள் சிக்கியதா?

Sunday, June 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டாக்டர் ராஜசேகர் - ஜீவிதா நட்சத்திர தம்பதி வீட்டின் மாடியில் கடந்த ஆண்டு மத்திய அரசு செல்லாது என்று அறிவித்த ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுக்கள் ரூ.7 கோடி அளவிற்கு சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து சினிமா தயாரிப்பு மேலாளர்கள் ஸ்ரீநிவாஸ், ரவி ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நடிகை ஜீவிதாவின் சினிமா தயாரிப்பு அலுவலகம் உள்ள வீட்டின் மாடியில் தான் இந்த தொகை பிடிபட்டுள்ளது. மேலும் கைதான ஸ்ரீநிவாஸ், நடிகை ஜீவிதாவின் மேலாளர் என்றும் கூறப்பட்டது.

ஆனால் இந்த தகவலை நடிகை ஜீவிதா மறுத்துள்ளார். செல்லாத நோட்டு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட ஸ்ரீநிவாஸ், தனது கணவர் நடித்து வரும் 'கருடலேகா' படத்தில் மேலாளராக பணியாற்றி வருவதாகவும், தனது கணவருக்கு மட்டுமின்றி அவர் பல நடிகர்களுக்கும் மேலாளராக பணியாற்றி வருவதாகவும் கூறிய ஜீவிதா, ஸ்ரீநிவாஸ் தனது உறவினர் இல்லை என்று வெளிவந்த தகவல் பொய்யானது என்றும் கூறியுள்ளார். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.7 கோடிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும் இதுகுறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.