close
Choose your channels

முடிவுக்கு வந்தது ஜீவா-நயன்தாராவின் "திருவிழா"

Monday, August 24, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான நடிகர் ஜீவா, வித்தியாசமான கதாபாத்திரங்களில் ரிஸ்க் எடுத்து நடிப்பதில் வல்லவர். இவர் நடித்த கற்றது தமிழ், ராம், ஈ, கோ ஆகிய பல படங்கள் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் 'என்றென்றும் புன்னகை' என்ற வெற்றிப் படத்தை கொடுத்த ஜீவா, தற்போது திருநாள், கவலை வேண்டாம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இவற்றில் 'கவலை வேண்டாம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. வரும் வாரத்தில் இருந்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் ஆரம்பமாகும் என்றும் விரைவில் இந்த படத்தின் ஆடியோ வெளியீடு மற்றும் படத்தின் வெளியீடு குறித்த தேதிகள் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

கடந்த 2006ஆம் ஆண்டு எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வெளிவந்த 'ஈ" படத்திற்கு பின்னர் ஜீவாவுடன் இந்த படத்தில் நயன்தாரா மீண்டும் ஜோடி சேருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் கருணாஸ், மீனாட்சி, உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ராம்நாத் என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே கருணாஸ் நடித்த 'அம்பாசமுத்திரம் அம்பானி' என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இந்த படத்தை கோதண்டபாணி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.