close
Choose your channels

பிக்பாஸில் புகுந்த அரசியல்: ஜூலியை ரவுண்டு கட்டிய ஆர்த்தி-காயத்ரி

Wednesday, June 28, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி ஆரம்பத்தில் மெதுவாக இருந்தாலும் தற்போது அனைவரும் எதிர்பார்த்த மாதிரி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

நேற்றைய நிகழ்ச்சியில் முதலில் வெளியேறுவதற்கான நாமினேஷன் நடந்தது. இதில் அதிகமான நெகட்டிவ் ஓட்டுக்களை நடிகர் ஸ்ரீ மற்றும் ஜல்லிக்கட்டு போராளி ஜூலி பெற்றுள்ளனர். எனவே இவர்களில் இருவரில் ஒருவர் வெளியேற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரசியலும் புகுந்துவிட்டது. பாஜக நிர்வாகிகளில் ஒருவரான காயத்ரி ரகுராமும், அதிமுக ஆதரவாளரான ஆர்த்தியும், மத்திய மாநில அரசுக்கு எதிராக போராடிய ஜூலியை கேள்வி மேல் கேள்வி கேட்டு திணறடித்தனர். குறிப்பாக மூன்று தலைவர்களை மட்டும் தாக்கி கோஷம் போட்டது ஏன் என்றும், ஜல்லிக்கட்டுக்கு போராடிய ஜூலி ஏன் விவசாயிகளுக்கு போராடவில்லை என்றும் வாக்குவாதம் செய்தனர். அதற்கு ஜூலியும் பதிலடி கொடுத்ததால் நிகழ்ச்சி பரபரப்பை எட்டியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூலியால் தான் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருப்பதால் அவர் வெளியேற்றப்பட வாய்ப்பு குறைவு என்பதே அனைவரின் கணிப்பாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.