close
Choose your channels

ஜோதிகாவின் ஐம்பதும், சூர்யாவின் முப்பந்தைந்தும்

Friday, July 3, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எட்டு வருடங்களுக்கு பின்னர் தமிழ் திரையுலகில் ரீ எண்ட்ரி ஆன ஜோதிகாவின் '36 வயதினிலே' திரைப்படம் இன்று 50வது நாளை கொண்டாடி வருகின்றது. இந்த நாளில் ரசிகர்களுக்கும், விநியோகிஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களுக்கு ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தனது நன்றியை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளது.

ஜோதிகாவின் '36 வயதினிலே' திரைப்படம் 50வது நாளை அடைந்துள்ள நிலையில் சூர்யாவின் 'மாஸ்' திரைப்படமும் இன்று 35வது நாளை கொண்டாடி வருகின்றது. ஒரே குடும்பத்தில் உள்ள இருவரது படங்களும் ஒரே நேரத்தில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சூர்யா நடித்து வரும் '24' படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், சூர்யா சிறப்பு வேடத்தில் நடித்த 'ஹைக்கூ' திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அடுத்தடுத்து இவ்வருடம் சூர்யாவின் படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளதால் அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.