close
Choose your channels

எங்களுக்கு இன்னொரு முகம் உண்டு. ஞானவேல்ராஜா எச்சரிக்கை

Tuesday, April 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் முடிந்தவுடன் வெற்றி பெற்ற விஷாலின் நம்ம அணியினர் நேற்று பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து அதில் தங்களுக்கு வாக்களித்த அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்
இந்த நன்றி கூட்டத்தில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசியபோது, 'இந்த தேர்தலில் வெற்றி பெற்ற நாங்கள் கண்டிப்பாக தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவோம் என்று கூறிய பின்னர் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை மற்றும் வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். அவர் கூறியதாவது: 'சீனியர் தயாரிப்பாளர்களுக்கு கண்டிப்பாக அனைவரும் மரியாதை கொடுக்க வேண்டும் . வெற்றி பெற்றுவிட்டோம் என்ற மமதையில் யாரும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி சீனியர் தயாரிப்பாளர்களின் மனம் புண்படும்படி நடந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்வதாக கூறினார்.
தயாரிப்பாளர் சங்க வளாகத்தில் தகாத வார்த்தைகளுக்கு இடமில்லை. சீனியர் தயாரிப்பாளர்களின் புகைப்படத்தை சுவரில் மாட்டி செலுத்துவது மட்டும் மரியாதை இல்லை. அவர்கள் நேரில் வரும்போதும் மரியாதை கொடுக்க வேண்டும். நம் வீட்டிற்கு அவர்கள் வந்தால் என்ன மாதிரியான மரியாதை கொடுப்போமோ அதே மரியாதையை இந்த வளாகத்திற்குள்ளும் கொடுக்க வேண்டும். அப்படி இல்லாமல் தகாத வார்த்தைகள் பேசி சீனியர் தயாரிப்பாளர்களை மரியாதை குறைவாக நடத்தினால் எங்களுடைய டீமின் இன்னொரு முகத்தை சம்பந்தப்பட்டவர்கள் பார்க்க வேண்டிய நிலை ஏற்படும்' என்று கூறினார். ஞானவேல்ராஜாவின் இந்த கருத்தை அனைவரும் வரவேற்று கைதட்டினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.