close
Choose your channels

போதை பொருள் விவகாரத்தில் மேனேஜர் கைது குறித்து காஜல் அகர்வால் விளக்கம்

Tuesday, July 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னனி நட்சத்திரங்கள் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டின் மேல் விசாரணைக்கு ஆளானார்கள். இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நடிகை காஜல் அகர்வால் அவர்களின் மேனேஜர் ரோனி, தனது வீட்டில் போதை பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகை ஒருவரின் மேனேஜர் போதை பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் இதுகுறித்து ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: ரோனி குறித்த முழு விபரங்களையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இந்த விஷயத்தில் என்னால் அவருக்கு எந்தவித உதவியையும் செய்ய முடியாது. நமது சமுதாயத்தின் தூய்மைக்கு தீங்கு செய்பவர்களுக்கு எந்தவிதத்திலும் உதவுவது நல்லதல்ல. நான் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்த முடியாது.

என்னுடைய பெற்றோர்கள் எப்போதும் என்னுடைய தொழிலில் கவனம் செலுத்துவதோடு, அனைவரிடமும் நல்ல உறவை ஏற்படுத்த உதவுகின்றனர். என்னை பொருத்தவரையில் அவருடன் தொழில்ரீதியான உறவு மட்டுமே இருந்தது. மற்றபடி அவருடைய மற்ற தொழில்கள், நடவடிக்கைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.