close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கஞ்சாகருப்பு ரீ-எண்ட்ரியா?

Tuesday, July 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் உலக நாயகன் கமல்ஹாசன் நடத்தும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி பலவிதமான சர்ச்சைகளுக்கு ஆளானாலும் கோடிக்கணக்கானோர் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியாக பிரபலம் அடைந்துவருகிறது. விமர்சனம் செய்வதற்கும் மீம்ஸ் போடுவதற்கும் என்றே பலர் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் 15 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இரண்டே வாரத்தில் 4 பேர் வெளியேற்றப்பட்டனர். முதலில் நடிகர் ஸ்ரீ உடல்நிலை சரியில்லாததாலும், அனுயா மற்றும் கஞ்சாகருப்பு குறைந்த வாக்குகள் பெற்றதாலும், பரணி விதிமுறைகளை மீறியதாலும் வெளியேறினர்.

ஆனால் இன்னும் இந்த நிகழ்ச்சி 85 நாட்கள் மீதமிருக்கும் நிலையில் 11 பேர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர் என்பதால் மீண்டும் கஞ்சா கருப்பு ரீஎண்ட்ரி ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. வாரம் ஒருவர் மட்டுமே எலிமினேட் என்ற வகையில் எதிர்பாராத வகையில் நான்கு பேர் வெளியேறிவிட்டதால் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தி கஞ்சா கருப்பு ரீஎண்ட்ரி ஆக வாய்ப்பு இருப்பதாகவும், இதற்கான வாக்களிப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் கஞ்சாகருப்பு வெளியேறும்போது கமலிடம் 'என்னை மறுபடியும் நிகழ்ச்சிக்குள் அனுப்பமுடிந்தால் அனுப்புங்கண்ணே' என்று கூறியதும், கஞ்சா கருப்பு வெளியேறிய பின்னும் சென்னையில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக வெளிவந்த செய்தியும் அவர் மீண்டும் ரீஎண்ட்ரி ஆக வாய்ப்பு இருப்பதை காட்டுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.