close
Choose your channels

கமல்ஹாசன் மீது மேலும் ஒரு வழக்கு

Friday, March 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதிகாசங்களில் ஒன்றாகிய மகாபாரதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக வள்ளியூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆதிநாத சுந்தரம் என்பவர் சமீபத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு குறித்து விசாரணை செய்ய காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று கும்பகோணம் மாவட்ட நீதிமன்றத்தில் அதே காரணத்திற்காக மேலும் ஒரு வழக்கு இன்று தொடரப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சியின் கும்பகோணம் மாவட்டச் செயலாளர் பாலா இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,.
ஏற்கனவே கமல்ஹாசன் தனது டுவிட்டரில் வன்முறையை தூண்டி வரும் கருத்துக்களை பதிவு செய்து வருவதாகவும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் சென்னை காவல்துறையினர்களிடம் அரசியல் கட்சி ஒன்று புகார் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.