close
Choose your channels

முதல்முறையாக ஆத்திரம் அடைந்த கமல்: பிக்பாஸ் பங்கேற்பாளர்கள் அதிர்ச்சி

Saturday, August 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில் ஒருநாள் கூட அவர் பங்கேற்பாளர்கள் யார் மீது கோபப்பட்டது கிடையாது. ஒருசிலர் கடுமையான வார்த்தையை உபயோகித்த போதிலும், பிக்பாஸ் விதிகளை மீறிய போதிலும் அவர்களது தவறுகளை மனம் நோகாதவாறுதான் எடுத்து கூறி வந்தார். ஓவியாவின் வெளியேற்றத்தின்போது கூட அவர் யாரிடமும் கடுமையாக நடந்து கொள்ளவில்லை. இதனால் அவர் நடுநிலைமை தவறியதாக கூட விமர்சனங்கள் எழுந்தது.

இந்த நிலையில் இன்று கமல் திடீரென பங்கேற்பாளர்கள் மீது முதல்முறையாக ஆத்திரம் அடைந்துள்ளதாக இன்றைய புரமோ வீடியோவில் உள்ளது. இன்றைய புரமோவில் 'பிக்பாஸ் என்று ஒருவரை வைத்து பேச வைத்துள்ளோம். அவரை பங்கேற்பாளர்கள் அவமரியாதை செய்வதாகவும், மைக்கை பொத்திக்கொண்டு ரகசியம் பேசினால் கேட்க முடியாது என்று நினைத்து கொள்கிறீர்களா? என்ன ஒரு சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு என்றும் நானும் எவ்வளவோ சொல்லி சொல்லி பார்த்தேன், ஆனால் அது பலிக்கவில்லை என்று தெரிகிறது, இனிமேல் நான் யார்கிட்டேயும் பேசுவதாக இல்லை' என்றும் கூறிவிட்டு கேமிராமேனை பார்த்து 'கட்' செய்யுங்கள் என்று ஆத்திரமாக கூறினார்.

கமல்ஹாசனின் இந்த கோபம் பங்கேற்பாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த புரமோவால் இன்றைய நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.