close
Choose your channels

கமல்ஹாசன் முறையாக வரி செலுத்தியுள்ளாரா? அமைச்சர் கேள்வி

Saturday, July 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக தைரியமான ஒருசில கருத்துக்களை முன்வைப்பதும் அந்த கருத்துக்கள் சர்ச்சைகளாக மாறுவதுமான காட்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் சமீபத்தில் தமிழகத்தில் எல்லா துறைகளிலும் ஊழல் நடந்து வருவதாக பேட்டி ஒன்றில் தெரிவித்தார். இதற்கு அமைச்சர் ஒருவர் கமல்ஹாசனை ஒருமையில் விமர்சித்திருந்தார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் சற்று முன் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, 'ஊழல் மலிந்துவிட்டதாக கூறுவதை கமல்ஹாசன் நிறுத்திக்கொள்ள வேண்டும்' என்றும், தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் இருந்தால் கமல்ஹாசன் நிரூபித்துக் காட்ட வேண்டும் என்றும் கூறினார். மேலும் கமல்ஹாசன் தன்னுடைய படங்களுக்கு முறையாக வரி செலுத்தியுள்ளாரா என்பதை ஆய்வு செய்யட்டுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.