close
Choose your channels

விஸ்வரூபம் 2, 'சபாஷ்நாயுடு' முடிந்த பின்னர் தான் அரசியல்: கமல்ஹாசன்

Tuesday, September 26, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் வெகுவிரைவில் அரசியலுக்கு தனிக்கட்சி ஆரம்பித்து வரவிருப்பதாகவும், கட்சியின் பெயர், கொடி மற்றும் சின்னம் குறித்து அவர் ஆலோசனை செய்து வருவதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட செய்தி வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், 'விஸ்வரூபம் 2', 'சபாஷ்நாயுடு' ஆகிய இரண்டு படத்தையும் முடிக்காமல் அரசியலுக்கு சென்றால் என்னை நம்பி பணம் போட்டவர்கள் ஏமாந்துவிடுவார்கள். எனவே இந்த இரண்டு படங்களையும் முடித்தபின்னர் தான் அரசியலுக்கு வரவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அரசியலுக்கு வந்தபின்னர் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும், இரண்டு படகுகளில் கால் வைத்து கொண்டு இருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

மேலும் கமல்ஹாசன் இந்த பேட்டியில் அவருடைய நீண்டகால கனவுப்படமான 'மருதநாயகம்' மற்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 'தலைவன் இருக்கின்றான்' படம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.