close
Choose your channels

'விருமாண்டி' வசனம் மூலம் சத்யராஜை பாராட்டிய கமல்ஹாசன்

Saturday, April 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த காவிரி பிரச்சனை குறித்த கூட்டம் ஒன்றில் நடிகர் சத்யராஜ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவர் மன்னிப்பு கேட்டால் மட்டுமே 'பாகுபலி 2' படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய அனுமதிப்போம் என்று கடந்த சில நாட்களாக கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

ஒரு மிகப்பெரிய படத்திற்கு தன்னால் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக நேற்று சத்யராஜ் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார். ஆனாலும் சத்யராஜூக்கு எதிராக கர்நாடகாவில் உருவபொம்மை எரிப்பு உள்ளிட்ட போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே 'பாகுபலி 2' ரிலீஸ் ஆகும் சூழ்நிலை இன்னும் கர்நாடகத்தில் ஏற்படவில்லை.

இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் சத்யராஜுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 'இக்கட்டான ஒரு சூழ்நிலையிலும் பகுத்தறிவை பராமரித்த சத்யராஜூக்கு வாழ்த்துக்கள் என்று அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அவர் நடித்த 'விருமாண்டி' படத்தின் வசனமான 'மன்னிப்புக் கேக்கறவன் பெரியமனுசன்' என்றும் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.