close
Choose your channels

விவாதங்களை துப்பாக்கியால் வெல்ல முயற்சி செய்யலாமா? கமல்ஹாசன்

Thursday, September 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று முன் தினம் இரவு பெங்களூரில் முத்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பத்திரிகைத்துறையினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முற்போக்கு சிந்தனையாளர்களை சுட்டுக் கொல்லும் இதுபோன்ற சம்பவங்களுக்கு இனிமேலும் இடமளிக்க கூடாது என்றும், கெளரியை கொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் கர்நாடக அரசுக்கு பத்திரிகையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

இந்த நிலையில் கெளரியின் படுகொலைக்கு நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். விவாதங்களை துப்பாக்கியால் வெல்ல முயற்சி செய்வது மோசமான வழி என சாடியுள்ள கமல், கெளரி லங்கேஷ் மறைவால் வாடுவோருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.