close
Choose your channels

கமல்-ஸ்ரீதேவியின் காவிய திரைப்படம் ரீமேக் ஆகிறதா?

Thursday, November 19, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன், மற்றும் ஸ்ரீதேவி ஆகிய இருவருக்குமே மறக்க முடியாத ஒரு படம் 'மூன்றாம் பிறை. இந்த படத்திற்காக கமல்ஹாசன் தனது முதல் தேசிய விருதை பெற்றார். பாலமகேந்திரா இயக்கிய இந்த காவிய திரைப்படம் தற்போது தமிழ் மற்றும் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே சத்மா' என்ற பெயரில் இந்தியில் வெளியான இந்த படத்தின் ரீமேக் உரிமையை லாய்ட் பேப்டிஸா (Llyod Baptisa) என்ற பிரபல விளம்பர பட இயக்குநர் பெற்றுள்ளதாகவும், விரைவில் தமிழ் மற்றும் இந்தியில் அவர் இந்த படத்தை ரீமேக் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்காலத்துக்கு தகுந்தவாறு திரைக்கதையில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாம். ஆயினும் கமல்-ஸ்ரீதேவி ஆகியோர்களின் நடிப்புக்கு இணையாக யார் நடிக்கவுள்ளனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.