close
Choose your channels

ஓர் ஆண்டு ஆட்சி: இமெயில் அனுப்பி பாராட்டிய கமல்ஹாசன்

Thursday, May 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் மீண்டும் அதிமுக அரசு பொறுப்பேற்று ஓரு ஆண்டு நிறைவு பெற்றது என்பதை அனைவரும் அறிவோம். இந்த நிலையில் நமது அண்டை மாநிலமான கேரளாவிலும் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிச ஆட்சி வெற்றிகரமாக ஓர் ஆண்டை இன்று நிறைவு செய்கிறது

இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் கேரள அரசுக்கு அனுப்பியுள்ள இமெயில் ஒன்றின் மூலம் ஓராண்டு ஆட்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் அனுப்பிய இமெயிலில், ' கேரளா அரசின் ஒரு ஆண்டு கால சிறந்த ஆட்சியை அம்மாநில மக்களுடன் இணைந்து நானும் கொண்டாடுகிறேன். கேரள அரசு, பல்வேறு துறைகளில் அண்டை மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் என்று நம்பிக்கை உள்ளது' என்று குறிப்பிட்டுள்ளாஅர். இந்த தகவலை கேரள அரசு வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே கமல்ஹாசன் செவாலியே விருது பெற்றபோது கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கமலுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அப்போது கமல்ஹாசன் கேரள முதல்வருக்கு நன்றி தெரிவித்து அனுப்பிய கடிதத்தில் 'நான் ஒரு மலையாளி; பினராயி விஜயன் என்னுடைய மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர் என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.