close
Choose your channels

அமிதாப்-ஜெயாவுடன் ஒப்பிடப்பட்ட அமெரிக்க துப்பாக்கி சூட்டில் பலியான ஸ்ரீனிவாஸ் மற்றும் அவரது மனைவி.

Thursday, March 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள கான்சாஸ் பகுதியில் இனவெறியன் ஒருவனால் துப்பாக்கி சூட்டில் பலியான இந்திய பொறியாளர் ஸ்ரீனிவாஸ் அவர்களின் மரணம் அவரது குடும்பத்தினர்களை மட்டுமின்றி இந்தியர்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
இந்நிலையில் ஸ்ரீனிவாஸை இழந்து வாடும் அவரது மனைவி சுனையனா தனது சமூக வலைத்தளத்தில் உருக வைக்கும் ஒரு பதிவை பதிவு செய்துள்ளார்.
கடந்த 2006ஆம் ஆண்டு சமூக வலைத்தளம் ஒன்றில் அறிமுகமாகி இருவரும் மனதால் இணைந்ததாகவும், இருவருடைய வீட்டிலும் முறையாக பேசி தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தான் ஒரு கணவரை மட்டும் இழக்கவில்லை என்றும் ஒரு நல்ல நண்பரை, நம்பிக்கைக்கு உரியவரை, ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டதாகவும், அவருடைய மறைவு தனக்கு மட்டுமின்றி அவரை சார்ந்த அனைவருக்கும் பேரிழப்பு என்றும் கூறியுள்ளார்.
மேலும் அமெரிக்காவில் வீடு கட்ட வேண்டும் என்று இருவரது கனவாக இருந்தது என்றும், அந்த கனவு கிட்டத்தட்ட நிறைவேறும் நேரத்தில் தான் தனது அருமை கணவரை இழந்துவிட்டதாகவும் உருக்கமாக கூறியுள்ளார். இந்த மிகப்பெரிய இழப்பிற்கும் பின் தனக்கு ஆறுதலாக இருந்த அனைவருக்கும் தான் நன்றி தெரிவித்து கொள்வதாகவும் அவர் கூறியிருந்தார்.
மேலும் அமெரிக்காவில் உள்ள ஸ்ரீனிவாஸின் நண்பர்கள் ஸ்ரீனிவாஸ் - சுனையனா தம்பதிகளை அமிதாப்பச்சன் - ஜெயாபச்சன் தம்பதியுடன் ஒப்பிட்டு அழைப்பார்களாம். ஏனெனில் ஸ்ரீனிவாஸ் 6அடி 2அங்குல உயரமும், சுனையனா 5 அடி உயரமும் இருந்ததால் அவ்வாறு ஒப்பிட்டு அழைத்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.