close
Choose your channels

சொந்த பட நிறுவனம் தொடங்கினாரா கார்த்தி?

Tuesday, August 18, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சூர்யா, 2D எண்டடெயின்மெண்ட் என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து ஜோதிகா ரீ எண்ட்ரி ஆன '36 வயதினிலே' என்ற வெற்றிப்படத்தை தயாரித்த நிலையில், அவரது சகோதரரும் பிரபல நடிகருமான கார்த்தியும் "பிரின்ஸ் புரடொக்ஷன்ஸ்' என்ற பெயரில் ஒரு படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தது.


இதுகுறித்து கருத்து கூறிய கார்த்தி, 'எனக்கு படம் தயாரிக்க வேண்டும் என்பதில் ஐடியா கிடையாது. மணிரத்னம் அவர்களிடம் உதவியாளராக இருந்த எனக்கு விரைவில் இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசைதான் இருக்கின்றதே தவிர தயாரிப்பாளர் ஆக சிறிதும் விருப்பவில்லை. மேலும் பிரின்ஸ் புரொடக்ஷன் என்பது என்னுடைய நிறுவனம் அல்ல. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனர் அவர்களின் நிறுவனம்தான் 'பிரின்ஸ் புரடொக்ஷன்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம்தான் காஷ்மோரா" படத்தை தயாரிக்கின்றது என்று விளக்கமளித்தார். இந்த நிறுவனம் ஏற்கனவே சூர்யா நடித்த 'சிங்கம் 2' என்ற படத்தை தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காஷ்மோரா படத்தில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும் இது ஒரு ஃபேண்டஸி மற்றும் ஸ்டைலிஷான் திரைப்படம் என்றும் வரலாற்று சிறப்பம்சம் உள்ள இந்த படத்தில் போர்க்காட்சிகளும் இருப்பதாக கார்த்தி கூறினார். இந்த படத்தில் கார்த்தி நடிக்கும் இரண்டு ரோல்களில் ஒன்று பேய் வேடம் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.