close
Choose your channels

மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் கார்த்தி?

Monday, July 6, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மெட்ராஸ், கொம்பன் ஆகிய இரண்டு தொடர் வெற்றிப் படங்களை கொடுத்த கார்த்தி, ஹாட்ரிக் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் அவர் நடித்து வரும் காஷ்மோரா மற்றும் நாகார்ஜுனனுடன் நடிக்கும் படம் ஆகியவற்றின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்நிலையில் கார்த்தி, மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் 'ஓகே கண்மணி' என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய மணிரத்னம், விரைவில் அதேபோல் ஒரு காதல் கதையை இயக்கவுள்ளதாகவும், அந்த படத்தில் ஹீரோவாக நடிக்க மணிரத்னம் கார்த்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. கார்த்தியும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், விரைவில் இந்த படத்தில் நடிக்க கார்த்தி ஒப்பந்தம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிகிறது.

'பருத்தி வீரன்' படத்தில் அறிமுகமாகும் முன்பே மணிரத்னம் இயக்கிய 'ஆயுத எழுத்து' திரைப்படத்தில் கார்த்தி, மணிரத்னத்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஸ்கிரிப்ட் தயாராகிவிட்டதாகவும், செப்டம்பர் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.