close
Choose your channels

கார்த்தி-தமன்னா படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை

Friday, July 3, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நாகார்ஜுனா-கார்த்தி நடிக்கவிருக்கும் பிரமாண்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் வெளிநாட்டில் நடைபெறவுள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இந்நிலையில் படக்குழுவினர் படப்பிடிப்பு நடத்தவுள்ள இடங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

முதலில் படக்குழுவினர் செர்பியா நாட்டின் தலைநகர் பெல்கிரேட் என்ற நகரில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். இந்த நகரில் படப்பிடிப்பு நடத்தும் முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற பெருமையை இந்த திரைப்படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள செர்பிய குடியரசு நாட்டின் தலைநகர் பெல்கிரேட் தெற்கு ஐரோப்பிய நாடுகளின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்று.

இயற்கை எழில் கொஞ்சும் இந்த நகரில் படப்பிடிப்பை நடத்தும் படக்குழுவினர், அதன் பின்னர் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் மற்றும் லையான் ஆகிய நகரங்களிலும், பின்னர் ஸ்லோவெனியா நாட்டின் தலைநகரான லிஜுபில்ஜானா (Ljubljana) என்ற நகரத்திலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். மொத்தம் 30 நாட்கள் பல்வேறு நகரங்களில் படப்பிடிப்பை முடித்த பின்னர் அடுத்த மாத மத்தியில் படக்குழுவினர் நாடு திரும்புவார்கள் என கூறப்படுகிறது.

நாகார்ஜுனா, கார்த்தி, தமன்னா, மற்றும் பலர் நடிக்கவுள்ள இந்த படத்தை வம்சி இயக்கவுள்ளார். பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்கின்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.