close
Choose your channels

பாடகி சுசித்ராவின் சர்ச்சைக்குரிய பதிவுகளுக்கு கணவர் விளக்கம்

Friday, February 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக பிரபல பாடகி சுசித்ராவின் சமூக வலைத்தள பக்கத்தில் பிரபல நடிகர்கள் குறித்து சர்ச்சைக்குரிய பதிவுகள் வெளிவந்தன. இந்த பதிவுகள் திரையுலகை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சுசித்ராவின் கணவர் கார்த்திக் குமார் தனது சமூக வலைத்தளத்தில் இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக சுசித்ராவின் டுவிட்டர் கணக்கு ஹேக்கிங் செய்யப்பட்டிருந்தது. இன்றுதான் அந்த கணக்கை மறுபடியும் மீட்டுள்ளோம். கடந்த சில நாட்களாக அந்த டுவிட்டர் கணக்கில் செய்யப்பட்ட பதிவிற்கும் சுசித்ராவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதில் உள்ளவை அனைத்தும் பொய்யானவை. இந்த விஷயத்தை இதற்கு மேலும் பெரிதுபடுத்த வேண்டாம் என்று ஊடகங்களை கேட்டு கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

சுசித்ராவின் கணவர் கார்த்திக்கின் இந்த விளக்கத்தை அடுத்து இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாகவே கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.