close
Choose your channels

சசிகலா மீது ஆள்கடத்தல் வழக்கு. கைது செய்யப்படுவாரா?

Wednesday, February 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயலலிதா சமாதி மீது சபதம் செய்துவிட்டு பெங்களூர் சிறையை நோக்கி அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சென்று கொண்டிருக்கும் நிலையில் அவர் மீது இன்னொரு வழக்கு புதியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ ஒரு புகார் ஒன்றை காவல்துறைக்கு அனுப்பியுள்ளார். அவருடைய புகாரில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் எம்.எல்.ஏக்களை கடத்தி கூவத்தூரில் வைத்திருந்ததாகவும், அதில் இருந்து தான் தப்பித்து வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரை அடுத்து சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீது ஆள்கடத்தல் உள்பட 3 பிரிவுகளில் கீழ் கூவத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கிற்காக சசிகலா கைது செய்யப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.