close
Choose your channels

'அரண்மனை 2' வதந்திகளுக்கு குஷ்பு விளக்கம்

Thursday, November 5, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுந்தர் சி இயக்கிய 'அரண்மனை 2' திரைப்படம் சென்சார் செய்யப்பட்டுவிட்டதாகவும் இந்த படத்திற்கு 'யூ' சர்டிபிகேட் கிடைத்துள்ளதாகவும் இந்த படம் நவம்பர் 20-ல் வெளியாகவுள்ளதாகவும் இன்று காலை முதல் சமூக இணையதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.

இதுகுறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் விளக்கமளித்துள்ளார். அரண்மனை 2' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகளில் சுந்தர் சி தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், இந்த படம் வரும் 2016ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தின் முதல் பாடல் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சித்தார்த், சுந்தர் சி, த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா, சூரி, கோவை சரளா, மனோபாலா, மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். அரண்மனை படத்தை ரிலீஸ் செய்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் 'அரண்மனை 2' படத்தையும் ரிலீஸ் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.