close
Choose your channels

அருள்நிதியின் அடுத்த பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்

Monday, March 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய அருள்நிதி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'ஆறாது சினம்' படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது 'பிருந்தாவனம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரபல இயக்குனர் ராதாமோகன் இயக்கி வரும் இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக தான்யா மற்றும் முக்கிய வேடத்தில் விவேக் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் அருள்நிதி நடிக்கும் இன்னொரு படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் சற்று முன்னர் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' என்ற தலைப்பில் உருவாகவிருக்கும் அருள்நிதியின் இந்த படத்தை மாறன் இயக்குகிறார். இந்த படத்தில் அருள்நிதிக்கு முதன்முறையாக ஜோடி சேருகிறார் மஹிமா நம்பியார். இவர் சமீபத்தில் வெளிவந்த 'குற்றம் 23' படத்தின் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.
தில்பாபு தயாரிக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவும், சான்லோகேஷ் படத்தொகுப்பும், ராகுல் கலை இயக்குனராகவும் பணிபுரியவுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் 27 முதல் தொடங்கவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.