close
Choose your channels

பிரபாஸுடன் நடிக்க்கும்போது அம்மா பீலிங் எப்படி வரும்? உண்மையை ஒப்புக்கொண்ட பிரபல நடிகை

Thursday, June 1, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எஸ்.எஸ்.ராஜமெளலியின் பிரமாண்டமான வெற்றி படங்களான 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' படங்களில் 'சிவகாமி' கேரக்டர் எவ்வளவு முக்கிய என்பது படம் பார்த்த அனைவருக்கும் தெரியும். இந்த கேரக்டரில் ரம்யாகிருஷ்ணன் மிகச்சிறப்பாக நடித்திருந்தாலும் ராஜமெளலியின் முதல் சாய்ஸ் ரம்யா அல்ல. முதலில் இந்த வேடத்தில் நடிக்க லட்சுமி மஞ்சுவிடம்தான் ராஜமெளலி அணுகியுள்ளார்.
ஆனால் பிரபாஸை விட இரண்டு வயது மட்டுமே அதிகமான தான் எப்படி பிரபாஸூக்கு அம்மாவாக நடிக்க முடியும் என்றும், அவருடன் நடித்தால் தனக்கு அம்மா ஃபிலீங்' நிச்சயமாக வராது என்றும் வேறு ஃபீலிங் தான் வரும் என்று கூறி அந்த படத்தை தவிர்த்துவிட்டார்.
இதன் பின்னர் இந்த கேரக்டருக்கு ஸ்ரீதேவியை ராஜமெளலி அணுகியதும் அவர் அதிக தொகை சம்பளமாக கேட்டதால் ரம்யா கிருஷ்னன் ஒப்பந்தம் செய்யப்பட்டதும் அனைவரும் அறிந்ததே.
தெலுங்கு திரையுலகில் இப்போதும் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருக்கும் லட்சுமிமஞ்சு, 'பாகுபலி 2' படத்தை தவிர்த்தது தனது சரியான முடிவுதான் இப்போதும் உறுதியுடன் கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.