close
Choose your channels

இறுதி நாள் படப்பிடிப்பில் பிணமாக நடித்த பெண் இயக்குனர்

Monday, July 13, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனரும் குணசித்திர நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன், தற்போது இயக்கி வந்த மூன்றாவது படமான 'அம்மணி' என்ற படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்துள்ளார்.


பொதுவாக அனைத்து இயக்குனர்களும் படத்தின் கடைசி நாளில் ஏதாவது ஒரு சந்தோஷமான காட்சியுடன் படத்தை நிறைவு செய்வார்கள். ஆனால் லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த செண்டிமெண்டுகளுக்கு கட்டுப்படாமல், இறுதி நாளில் ஒரு இறுதிச்சடங்கு காட்சியுடன் படத்தை முடித்துள்ளார். அதுமட்டுமின்றி அவரே இந்த காட்சியில் பிணமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. லட்சுமி ராமகிருஷ்ணனின் தைரியமான முடிவை படக்குழுவினர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.

85 வயது சுப்புலட்சுமி என்பவர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தின் கதை, ஒரு உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. லட்சுமி ராமகிருஷ்ணன் சந்தித்த ஒரு முதிய பெண்ணின் கதையை மையப்படுத்தி இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து, இன்னும் சில நாட்களில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் ஆரம்பமாகும் என்றும், இன்னும் சில மாதங்களில் இந்த படம் ரிலீஸாகும் என்றும் கூரபடுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.