close
Choose your channels

போர் வரும்போது பார்த்துக் கொள்வோம். ரஜினிகாந்த்

Friday, May 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்று ஐந்தாவது நாளாக ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், ரசிகர்களிடையே பேசியதாவது:

என்னை வாழ வைத்த தெய்வங்கள் நீங்கள். என்னை நன்றாக வாழ வைத்த நீங்கள் நன்றாக வாழ வேண்டும் என்று நான் நினைப்பது தவறா? ஆனால் ஒருசிலர் கேட்கின்றனர், தமிழர்களை காப்பாற்ற இங்கு தலைவர்கள் இருக்கின்றனர், நீங்கள் தேவையில்லை என்று. இருக்கின்றார்கள் நான் இல்லை என்று கூறவில்லை. ஸ்டாலின் மிகச்சிறந்த நிர்வாகி, அவருக்கு மட்டும் சுதந்திரம் கொடுத்தால் மிகப்பெரிய அளவில் சாதிப்பார் என்று சோ அவர்கள் கூறியுள்ளார். அன்புமணி ராமதாஸ் நல்ல படிப்பாளி, உலகம் முழுவதும் சுற்றிய முற்போக்கு எண்ணங்கள் கொண்டவர், தலித்துக்காக போராடி வரும் திருமாவளவன் அவர்களும் ஒரு திறமைசாலிதான். சீமான், ஒரு நல்ல போராளி, அவர் தெரிவித்த ஒருசில கருத்துக்களை கேட்டு பிரமித்து போயுள்ளேன்; ஆனால் சிஸ்டம் கெட்டு போய் உள்ளது, ஜனநாயகமே கெட்டு போயுள்ளது. எனவே சிஸ்டத்தை மாற்றம் செய்ய வேண்டும். மக்களின் மனநிலையை மாற்ற வேண்டும்

எதிர்ப்பு இருந்தால் தான் வளர முடியும், நமக்கு கிடைக்கும் திட்டுக்கள், விமர்சனங்கள் அனைத்துமே நமக்கு உரம் மாதிரி. நம்மை எதிர்ப்பவர்கள் நமக்கு நன்மை செய்து கொண்டிருக்கின்றனர். ஒரு ராஜாவிடம் போர்ப்படைகள் என்று ஒரு குறிப்பிட்ட அளவுதான் இருப்பார்கள். ஆனால் போர் என்று வந்துவிட்டால் நாட்டில் உள்ள ஆண்மகன்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நாட்டிற்காக போராடுவார்கள், அதுவரை அவர்கள் அனைவரும் தங்கள் கடமையை செய்துவருவார்கள். அதேபோல் எனக்கும் சில கடமைகள் உள்ளன, உங்களுக்கும் கடமைகள் உள்ளன, நாம் நம்முடைய கடமைகளை பார்போம், போர் என்று வரும்போது களத்தில் இறங்குவோம்' என்று ரஜினிகாந்த் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.