close
Choose your channels

அத்தைக்கு பதிலாக தண்டனை அனுபவிக்க தயாரா? தீபாவுக்கு நடிகர் ஜீவா கேள்வி

Friday, February 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் தமிழக அரசியல் எந்த திசையில் செல்கிறது என்றே தெரியவில்லை. நாளொரு திருப்பமும், பொழுதொரு பிரேக்கிங் நியூஸ்களும் வந்து கொண்டிருக்கின்றது. ஜெயலலிதாவின் கூடவே பல ஆண்டுகள் இருந்த ஒரே தகுதியை வைத்து முதல்வராக நினைப்பவர் ஒருபுறம் என்றால், ஜெயலலிதாவின் உறவினர் என்ற ஒரே தகுதியுடன் இன்னொருவர் புதுக்கட்சியை ஆரம்பித்துள்ளார்.
இன்று புதிய கட்சியை தொடங்கியுள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா குறித்து பல்வேறு ஆதரவு மற்றும் எதிர்ப்பு விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் நடிகர் ஜீவா, தனது சமூக வலைத்தளத்தில் திடீரென அரசியல் குதிப்பவர்களுக்கு தனது ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
ஜெ தீபா, உங்களுக்கு அத்தையின் (ஜெயலலிதா) சொத்துக்கள் வேண்டும், அத்தையின் கட்சி வேண்டும், அத்தையின் பதவிவேண்டும்.. அத்தைக்கு கிடைத்த தண்டனை மட்டும் உங்களுக்கு வேண்டாமா? அத்தையின் வாரிசுதானே..? உங்கள் அத்தையை ஊழல் செய்த குற்றவாளியென உச்ச நீதிமன்றம் உறுதிசெய்த அதே நாளில், அதை ஒரு பெருமையாக நினைத்துக் கொண்டு உங்களால் எப்படி அரசியல் பிர(வேஷம் ) செய்ய முடிகிறது.
உங்களுக்கு அரசியல் ஆசை இருந்தால் அந்த நான்கு ஆண்டு சிறைத் தண்டனையை அவருக்கு பதிலாக நீங்கள் அனுபவித்து உங்கள் தலைவி மீதுள்ள களங்கத்தை போக்கிவிட்டு அரசியலுக்கு வாருங்கள்... மக்களை ஏமாற்றாதீர்கள்.
தீபாவுக்கு, என் தாழ்மையான வேண்டுகோள்... தமிழக மக்கள் ஐம்பது ஆண்டுகளாக ஏமாந்தது போதும். உங்கள் சுயநலத்திற்காக கட்சி ஆரம்பித்து தமிழக மக்களை நீங்களும் ஏமாற்றாதீர்கள் ! தமிழகத்தின் தற்போதய தேவை சுயநல, அனுதாப ஆட்சி இல்லை. அறவழியிலான ஆக்கபூர்வ ஆட்சி," என்று கூறியுள்ளார். நடிகர் ஜீவாவின் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.