close
Choose your channels

ரஜினியுடன் லைகா நிறுவனத்தின் ராஜூமகாலிங்கம் சந்திப்பு

Saturday, April 1, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லைகா நிறுவனம் ஈழத்தமிழர்களுக்காக இலங்கையில் நடத்தவுள்ள நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொள்ள இருந்து, பின்னர் அவர் அந்த பயணத்தை ரத்து செய்துவிட்டதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்

இந்நிலையில் லைகா நிறுவனத்தின் ராஜூமகாலிங்கம் நேற்று போயஸ் கார்டனில் ரஜினியை சந்தித்து பேசியுள்ளார். ராஜூமகாலிங்கம் அவர்களின் பிறந்த நாள் காரணமாக ரஜினியிடம் அவர் ஆசி பெறவே இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. ராஜூமகாலிங்கம் அவர்களின் சமூக வலைத்தள பக்கமும் இந்த தகவலை உறுதி செய்கிறது.

இந்த சந்திப்பு குறித்து ராஜூமகாலிங்கம் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ' ஆசிர்வதிக்கப்பட்டேன். இதுவொரு ஆன்மீக சந்திப்பு. இதைவிட இந்த பிறந்த நாளில் எனக்கு வேறு எதுவும் பெரிதில்லை' என்று அவர் பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், வரும் தீபாவளி விருந்தாக இந்த படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.