close
Choose your channels

ஓபிஎஸ் அணியில் பிரபல திரைப்பட பாடலாசிரியர்

Monday, April 3, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'பாண்டவர் பூமி', 'ஆட்டோகிராப்', 'ராம்', உள்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய பிரபல பாடலாசிரியர் சினேகன் இன்று ஓபிஎஸ் அணியின் இணைந்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் தீவிர அனுதாபியான சினேகன், அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, "என்னமா ஆச்சு உங்களுக்கு' என்ற கவிதையை எழுதி அனைவருடைய கண்களையும் கலங்க வைத்தார்.
இந்த நிலையில் இன்று பாடலாசிரியர் சினேகன் ஓபிஎஸ் அவர்களை நேரில் சந்தித்து அவரது அணியில் இணைந்தார்,
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற இன்னும் ஒருசில தினங்களே இருக்கும் நிலையில் ஓபிஎஸ் அணியில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், கவிஞர் சினேகன் ஆகியோர் இணைந்துள்ளது அவரது அணியை மேலும் வலுப்படுத்தும் வகையில் உள்ளது. மேலும் ஒருசிலர் இன்னும் ஓரிரு நாட்களில் ஓபிஎஸ் அணியில் இணையவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.