close
Choose your channels

பாடல்களின் ராயல்டி இளையராஜாவுக்கு மட்டும் சொந்தமில்லை. மதன்கார்க்கி

Monday, March 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசைஞானி இளையராஜா, தான் இசையமைத்த பாடல்களின் காப்புரிமை குறித்து பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு அனுப்பிய நோட்டீஸ் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.இந்த பிரச்சனை கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. பெரும்பான்மையோர் இளையராஜாவின் நோட்டிஸ் நடவடிக்கையை விமர்சித்து வருகின்றனர்.


இந்நிலையில் பிரபல பாடலாசிரியர் மதன்கார்க்கி இளையராஜாவின் நோட்டீஸ் நடவடிக்கை குறித்து தனது சமூக வலைத்தளத்தில் தனது கருத்தை கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

பாடல்களின் ராயல்டி இசை அமைப்பாளருக்கு மட்டும் சொந்தமில்லை. அந்த பாடலை எழுதிய பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளருக்கும் சொந்தம். இளையராஜா சொல்வது சரிதான் என்றாலும் கூட, அவரே வெளியில் பாடல்களை பாடினால் பாடலாசிரியரிடமும், தயாரிப்பாளரிடமும் அனுமதி பெற வேண்டும்.

மேலும் எஸ்பிபி மற்றும் சித்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பியதற்கு பதிலாக ஒரு ஃபோன் கால் செய்து நட்பு முறையில் இந்த விஷயத்தை அணுகியிருக்கலாம் என்றும் மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.