close
Choose your channels

பெண்கள் பற்றாக்குறை எதிரொலி: ஒரே பெண்ணை திருமணம் செய்யும் அண்ணன் - தம்பிகள்

Wednesday, May 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மகாபாரத கதையில் பாண்டவர்களான ஐந்து சகோதரர்களை பாஞ்சாலி என்ற ஒரே பெண் திருமணம் செய்தார் என்பதை படித்துள்ளோம். ஆனால் இந்தியாவில் உள்ள ஒருசில கிராமங்களில் ஒரே பெண் ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட சகோதரர்களை திருமணம் செய்யும் நடைமுறை இன்றும் இருந்து வருவதாக தெரிய வந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த மோரேனா என்ற கிராமத்தில் ஆண்களுக்கு சரியான விகிதத்தில் பெண்கள் இல்லாத காரணத்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் ஒரே பெண்ணை திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனாலும் இதிலும் ஒரு தர்மத்தை கடைபிடிக்கின்றனர். ஒரு பெண் ஒரே குடும்பத்தை சேர்ந்த எத்தனை ஆண்களையும் திருமணம் செய்து கொள்வார், ஆனால் வேறு குடும்பத்து ஆண்களை திருமணம் செய்ய மாட்டாராம்
மோரேனா கிராமம் மட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள பல கிராமங்களில் இந்த விநோத நடைமுறை இருந்து வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் மட்டுமின்று உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் ஏன், நமது தமிழகத்திலும் நீலகிரியில் வாழ்ந்து வரும் ஒரு குறிப்பிட்ட இன மக்கள் இந்த விநோத வழக்கத்தை கடைபிடித்து வருகின்றார்களாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.