close
Choose your channels

புளூவேல் விளையாட்டை பகிர்ந்தால் தண்டனை: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

Monday, September 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

புளூவேல் ஆன்லைன் விளையாட்டால் இளைஞர்களின் உயிர்கள் நாளுக்கு நாள் பலியாகி கொண்டே வரும் நிலையில் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை தானாகவே முன்வந்து கடந்த வெள்ளியன்று வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது.

இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற போது, 'தமிழகத்தில் புளூவேல் விளையாட்டு முற்றிலுமாக தடை செய்யப்பட்டுவிட்டதாக சிபிசிஐடி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது.

இந்த நிலையில் உயிரைப் பலிவாங்கும் புளூ வேல் கேமை ஷேர் இட் அல்லது சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்தாலே கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தவரவிட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.