close
Choose your channels

'பாகுபலி'யுடன் கனெக்சன் ஆகும் மகேஷ்பாபு

Sunday, September 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகப்புகழ் பெற்ற 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' படங்களை இயக்கிய பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படம் என்னவாக இருக்கும், அவரது படத்தில் ஹீரோவாக நடிக்க கொடுத்து வைத்திருக்கும் நாயகன் யார்? என்ற கேள்விகள் கடந்த சில மாதங்களாக எழுந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது அதற்கு பதில் கிடைத்துள்ளது.

ஆம், எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்தில் பிரின்ஸ் மகேஷ்பாபு நடிக்கவுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ஸ்பைடர்' படத்தை அடுத்து தற்போது மகேஷ்பாபு கொரட்டலா சிவா இயக்கி வரும் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதனையடுத்து வம்சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்றும் இது மகேஷ்பாபுவின் 25வது படம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த இரண்டு படங்களை அடுத்து அவர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கும் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை மகேஷ்பாபு உறுதி செய்துள்ளதாகவும் இந்தா படம் வரும் 2018ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.