close
Choose your channels

மணிரத்னம் இயக்கத்தில் ஓகே கண்மணி 2?

Wednesday, July 8, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

துல்கார் சல்மான், நித்யாமேனன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'ஓகே கண்மணி' சூப்பர் ஹிட் ஆன உற்சாகத்தில், மணிரத்னம் தனது அடுத்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஹீரோவாக கார்த்தி நடிக்கவுள்ளதாக கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது முற்றிலும் மாறுபட்ட இன்னொரு தகவல் இந்த புதிய படம் குறித்து வெளிவந்துள்ளது.

ஓகே கண்மணி' படத்தில் நடித்த துல்கார் சல்மான் தான் மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ என்றும், இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவே கார்த்தியிடம் மணிரத்னம் அணுகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் ஓகே கண்மணி' படத்தின் பார்ட் 2 படமாக இருக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை மணிரத்னம் இரண்டாவது பாக படம் எடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஓகே கண்மணி' வெற்றிக்கு பெரிதும் காரணமாக இருந்த பி.சி.ஸ்ரீராம் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் இந்த புதிய படத்திலும் பணியாற்றவுள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கவிருக்கும் இந்த படத்தின் தொடக்கவிழா குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. இளையதலைமுறையினர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட ஓகே கண்மணி' இரண்டாவது பாகம் வெளிவந்தால் கண்டிப்பாக நல்ல ஓப்பனிங் வசூல் கிடைக்கும் என விநியோகிஸ்தர்கள் தரப்பில் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.