close
Choose your channels

முதல்முறையாக மணிரத்னம் இயக்கத்தில் நயன்தாரா - ஸ்ருதிஹாசன்

Saturday, July 18, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'ஓகே கண்மணி' வெற்றிப்படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ள படத்திற்கு 'கோமாளி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் கார்த்தி-நயன்தாரா மற்றும் துல்கார் சல்மான் - ஸ்ருதிஹாசன் ஜோடிகள் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


கார்த்தியும் நயன்தாராவும் ஏற்கனவே இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தின் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் 'காஷ்மோரா' என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக மணிரத்னத்தின் படத்தில் ஜோடி சேரவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்தி, துல்கார் சல்மான் ஆகிய இருவருமே ஏற்கனவே மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து' படத்தில் கார்த்தி உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பதும், மணிரத்னத்தின் சூப்பர் ஹிட் படமான ஓகே கண்மணியில் துல்கார் சல்மான் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.

ஆனால் நயன்தாராவும் ஸ்ருதிஹாசனும் முதல்முறையாக மணிரத்னம் படத்தில் நடிக்கவுள்ளனர். இருவருக்குமே இந்த படம் புதுவித அனுபவங்களை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.