close
Choose your channels

சபாநாயகர் சரியாக செயல்படவில்லை. மார்க்கண்டேய கட்ஜூ

Saturday, February 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அரசுக்கு நம்பிக்கை வாக்கு கோரியதால் கூட்டப்பட்ட சட்டசபை பெரும் அமளியாகியுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றும் நடவடிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று நடந்த நிகழ்வுகளை கவனித்து வரும் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, 'தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகர் சரியாக செயல்படவில்லை என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
சரியாக 11 மணிக்கு ரகசிய வாக்கெடுப்பு நடத்தியிருந்தால் இவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டிருக்காது என்றும் ஆட்சி நீடிப்பது குறித்த முடிவு அடுத்த 15 அல்லது 20 நிமிடங்களுக்குள் தெரிந்திருக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் ஜனநாயக படுகொலை நடந்துள்ளதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.