close
Choose your channels

ஓபிஎஸ்-க்கு திடீர் உடல்நலக்குறைவு. மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள்

Wednesday, February 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்து பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட நிலையில் நேற்று இரவு முழுவதும் அவர் உறங்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

கடும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட ஓபிஎஸ் அவர்கள் இன்று காலை 8.30 மணியளவில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு தூக்கமின்மை காரணமாகவும், சோர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அவருக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டதாகவும், அவரது உடல்நலக்குறைவுக்கு நீண்ட நேரம் தூங்காமல் இருந்த சோர்வுதான் காரணம் என்றும் தெரிய வந்துள்ளது.

இதனால் மருத்துவர்களின் அறிவுரைக்கு ஏற்ப செய்தியாளர் சந்திப்பு ஒருசில மணி நேரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.