close
Choose your channels

"தமிழாலே ஒன்னானோம் மாறாது எந்நாளும்" மெர்சல் பட டீசர் கூறுவது என்ன?

Thursday, August 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் சிங்கிள் டீசர் வீடியோ நேற்று நள்ளிரவு சரியாக 12 மணிக்கு இணையதளத்தில் வெளியாகி பெரும் சுனாமியை ஏற்படுத்தியது. ஏற்கனவே ஜல்லிக்கட்டு தொடர்புடைய முதல் போஸ்டரும், நேற்று வெளியான இரண்டாவது போஸ்டரும் தமிழகம் முழுவதும் மெர்சலான நிலையில் இந்த சிங்கிள் டீசர் சமூக வலைத்தளங்களில் வைரலானாது.

“தமிழாலே ஒண்ணானோம்... மாறாது எந்நாளும்” இந்த சிங்கிள் பாடல் வரிகள் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் மெரினாவில் நடந்த மாணவர்களின் புரட்சி போராட்டமான ஜல்லிக்கட்டு போராட்டத்தின் எழுந்த எழுச்சி குரல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிகள் இந்த பாடலில் இருப்பதால் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களின் ஆதரவும் இந்த டீசருக்கு கிடைத்துள்ளது என்பது கமெண்ட்டுகளில் இருந்து தெரிய வருகிறது.

ஏற்கனவே கமல், ரஜினி அரசியல் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் விஜய்யின் அரசியல் பாதைக்கு இந்த பாடலும் படமும் நுழைவு வாயிலாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.